அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-05-09 17:22 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே தரியம்பட்டியில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு கிராமத்தில் வயல் பகுதிகளிலும் கண்மாய் பகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கட்டு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மஞ்சுவிரட்டுக்கு உரிய அனுமதி பெறாமல் நடைபெற்றதாக மேலபட்டமங்கலம் குரூப்பை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சித்ரா திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதில் தரியம்பட்டியைச் சேர்ந்த ராஜா, லட்சுமணன், பெரியகருப்பன், வெள்ளைகண்ணு, பெரியகருப்பன் உள்ளிட்ட 5 பேர் மீது திருக்கோஷ்டியூர் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்