வாலிபர்கள் மீது தாக்குதல்

வாலிபர்களை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-09 19:31 GMT
கரூர் மாவட்டம் மேலமாயனூர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் தினேஷ் (32). இவர் நண்பர்களான  பிரபு (30), கருணாகரன் (23) ஆகியோர் காட்டுப்புத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் ஊருக்கு செல்லும் போது, மந்தைக்களம் என்ற இடத்தில் வைத்து  கல்லூர் பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த  ராம்குமார் (27) அவர்கள் மீது உரசுவது போல் சென்றது. இதில் ஏற்பட்ட தகராறில் ராம்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்த்து 3 பேரையும் தாக்கினர். இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்