விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-09 23:00 GMT
குன்னம்:
பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் கிராமத்தை ேசர்ந்த மகாலிங்கத்தின் மகன் மணிகண்டன்(வயது 25). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் செங்குணம் பாலம்பாடி அருகே வயலில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணகி மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், மணிகண்டன் சம்பாதித்த பணத்தை வீட்டில் கொடுக்காமல், அவரே செலவு செய்து வந்ததாகவும், இதனால் அவருக்கு எப்படி திருமணத்திற்கு பெண் கொடுப்பார்கள் என்று வீட்டில் பெற்றோர் திட்டியதாகவும், இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்