கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம்

கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.

Update: 2022-05-09 23:03 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணியளவில் ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குவாகம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற உள்ளது. கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்து பயன்பெறலாம். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்