நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன்அரிசி வந்தது

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன்அரிசி வந்தது.

Update: 2022-05-10 17:51 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி பிற மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் நேற்று அரக்கோணம் பகுதியில் இருந்து 2,600 டன் ரேஷன்அரிசி சரக்கு ரெயிலில் வந்தது. இந்த அரிசி மூட்டைகள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து 120 லாரிகளில் ஏற்றப்பட்டு, நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் ராசிபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும் செய்திகள்