போச்சம்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

போச்சம்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-10 18:03 GMT
காவேரிப்பட்டணம்:
போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் பூவரசன் (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த பூவரசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்