முதியவர் உள்பட 3 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 3 பேர் பலியாகினர்.

Update: 2022-05-10 18:06 GMT
மதுரை, 
மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 3 பேர் பலியாகினர். 
அரசு பஸ் 
சென்னை வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 30). மதுரைக்கு வந்திருந்த இவர் சம்பவத்தன்று நள்ளிரவு ஊருக்கு செல்வதற்காக மாட்டுத்தாவணி பஸ்நிலையம் வந்தார். அப்போது அவர் மாட்டுத்தாவணி மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. 
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிதம்பரம் பரிதாபமாக இறந்தார்.
முதியவர் சாவு 
விருதுநகர் மாவட்டம், பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் மணி (65). இவர் சம்பவத்தன்று இரவு பாண்டிகோவில் ரிங் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மணி மீது மோதியது. 
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மணி பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் விசாரணை 
சிவகங்கை மாவட்டம், அய்யனார்புரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (27). சம்பவத்தன்று இவர் வண்டியூர் செக்போஸ்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார். 
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிக்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துகள் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்