விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே சித்துப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 76). இவர், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூச்சி மருந்தை (விஷம்) மதுவுடன் கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.