கட்டிட தொழிலாளி தற்கொலை

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-10 18:39 GMT
திருமங்கலம், 
திருமங்கலம் அருகே உள்ள சுந்தரகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணன் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருடைய தாய், தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் இவருடைய அண்ணன் முருகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். பாலமுரளிகிருஷ்ணன் தனது பெற்றோர் இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்