ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-10 19:20 GMT
தோகைமலை, 
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரக்கோரி தோகைமலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் பாலமுருகன், முன்னாள் தலைவர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்