ஆசிரியை மாயம்

ஆசிரியை மாயமானார்

Update: 2022-05-10 19:57 GMT
தஞ்சை மாவட்டம் சூரியம்பட்டியை சேர்ந்தவர் தேவிகா (27). இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று விடுதியில் இருந்து வெளியே சென்ற தேவிகா மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்