கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த கூட்டுறவுத்துறை ஊழியர்கள்

கோரிக்கை அட்டை அணிந்து கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பணிபுாிந்தனர்.

Update: 2022-05-10 20:02 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், துணை பதிவாளர் அலுவலகம், துணை பதிவாளர் அலுவலகம் (பொது வினியோக திட்டம்) ஆகிய அலுவலகங்களில் நேற்று கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதில் அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார் தலைமையில் 32 பேர் பங்கேற்றனர். விகிதாச்சார விதிகளை தளர்த்தி தகுதியுள்ள அனைத்து இளநிலை ஆய்வாளர்களை முதுநிலை ஆய்வாளராகவும், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் ஆகியோரை இளநிலை உதவியாளர்களாகவும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோரை இளநிலை ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்க வேண்டும். தேசிய துணை பதிவாளர் பதவி உயர்வு பட்டியலையும், தேசிய கூட்டுறவு சார்பதிவாளர் பதவி உயர்வு பட்டியலையும் வருகிற 31-ந் தேதிக்குள் அங்கீகரித்து பணியிடம் வழங்க வேண்டும். கூட்டுறவு சார் பதிவாளர் நல அலுவலர் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் ஆகியோரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல் இயக்குனராக நியமனம் செய்ய வலியுறுத்தும் பதிவாளர் சுற்றறிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்