பகவதி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

பகவதி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

Update: 2022-05-10 20:04 GMT
தோகைமலை, 
தோகைமலையில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி திரளான பெண்கள் மேளதாளம் முழங்க பூத்தட்டை ஊர்வலமாக முக்கிய வீதிகளில் வந்தனர். பின்னர் பகவதி அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதையடுத்து, 15-ந் தேதி பால்குட ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 16-ந் தேதி கருப்பர் கோவிலில் கிடா வெட்டுதலும், 17-ந் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்