இரவில் வீடுகளின் கதவை தட்டும் கரடி

இரவில் வீடுகளின் கதவை தட்டும் கரடி

Update: 2022-05-11 14:16 GMT
குன்னூர்

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி காணப்படுகிறது. வனப்பகுதியில் சுற்றித்திரியும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலை ேதாட்டம் வழியாக குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன

 இந்த நிலையில் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுகிறது. இது அந்த கிராம மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. எனவே அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். அதன்பேரில் அங்கு வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்