சோமனஅள்ளியில் அக்குமாரியம்மன் கோவில் திருவிழா

சோமனஅள்ளியில் அக்குமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-05-11 16:16 GMT
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் அக்குமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 6-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து சோமனஅள்ளி, கசியம்பட்டி, பி.கொல்லஅள்ளி உள்ளிட்ட 12 கிராம மக்கள் பொங்கல் வைத்தும், அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு, பூங்கரகம், பால்குடம் எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அலகுகுத்தியும், பல்வேறு வேடங்கள் அணிந்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி ஏராளமானோர் ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர். விழாவில் பக்தர்களுக்கு சாட்டை அடி கொடுத்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்