பாம்பு கடித்து வாலிபர் பலி

பாம்பு கடித்து வாலிபர் பலியானார்.

Update: 2022-05-11 18:12 GMT
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருேக உள்ள மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் முருகேசன் (வயது 35) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது விஷபாம்பு ஒன்று இவரை கடித்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்