பத்தமடையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பத்தமடையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-11 19:41 GMT
சேரன்மாதேவி:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், பத்தமடை பேரூராட்சி அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை அளித்தார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் அல்லாபிச்சை, சங்க நிர்வாகிகள் மாதவன், நாகராஜன், அசன் மைதீன், சந்திரசேகர் சின்ன மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்