கோபி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை; குடும்ப தகராறில் விபரீதம்

கோபி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-11 20:42 GMT
கடத்தூர்
கோபி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடும்பத்தகராறு
கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். பனியன் கம்பெனி தொழிலாளி. இவருடைய மனைவி ரேணுகாதேவி (வயது 32). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். 
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ரேணுகாதேவி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். 
உடல் கருகினார்...
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேணுகாதேவி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால்  உடல் கருகிய அவர் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து ரேணுகா தேவியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ரேணுகாதேவி இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்