கிராவல் மண் திருடியவர் கைது
கிராவல் மண் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூரை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவர் தண்ணீர்பந்தல் அருகே டிப்பர் லாரியில் கிராவல் மண் திருடியபோது பெரம்பலூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.