தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த புள்ளிமானை கடித்து குதறிய நாய்கள்; பொதுமக்கள் மீட்டனர்

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறின.

Update: 2022-05-11 21:58 GMT
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்று தாளவாடி அருகே உள்ள திப்புசர்க்கிள் என்ற ஊருக்குள் புகுந்தது.
இதை பார்த்த அங்கிருந்த காவல் நாய்கள் அந்த புள்ளிமானை துரத்தி கடித்தது. உடனே பொதுமக்கள் நாய்களை விரட்டி அடித்து புள்ளிமானை மீட்டனர். பின்னர் இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து மானை பத்திரமாக வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.

மேலும் செய்திகள்