ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.8½ லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு

ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-13 19:06 GMT
திருச்சி:

திருச்சி காஜாநகர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜிமுகமது. இவர் புத்தாநத்தம் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் அறிமுகமான 4 பேர் ரியல் எஸ்டேட் தொழிலில் அவரை கூட்டாளியாக சேர்ப்பதாக கூறி, அவரிடம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு அவருக்கு எந்தவித பங்கு தொகையும் கொடுக்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை ஷாஜிமுகமது திருப்பி கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் பணத்தை திருப்பி தராமல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சோமரசம்பேட்டையை சேர்ந்த மாணிக்கம், விஜய்ஆனந்த், ஹரிகிருஷ்ணன், புத்தூரை சேர்ந்த மோகன்ராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்