டிட்டோஜாக் ஆயத்த கூட்டம்
டிட்டோஜாக் ஆயத்த கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது.
கரூர்,
டிட்டோஜாக் ஆயத்த கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிற 18-ந்தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது. அனைத்து ஆசிரியர்களையும் பங்கேற்க செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மணிகண்டன், ரகுபதி, அமுதவேல், அழகுராசு, கிருஷ்ணகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.