பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

Update: 2022-05-14 20:55 GMT
திருமங்கலம்
கள்ளிக்குடி அடுத்த வடக்கம்பட்டி சேர்ந்தவர் சீதாராமன். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. இவருடைய மனைவி செல்வராணி (வயது 60). நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் பகுதியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது கேட்டை பூட்டாமல் இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் கதவை திறந்து செல்வராணி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்