திண்டிவனம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

திண்டிவனம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-05-15 17:24 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை போலீசார் தாதாபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, அத்திப்பாக்கம் கூட்டுரோடு அருகே சென்ற போது, அந்த பகுதியில்  மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.   
அதில், அவர் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி அடுத்த காளபெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் மகன் திருமுருகன் (வயது 47) என்பதும், அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஒரு பையில் வைத்து, அந்த பகுதியில் விற்பனைக்காக எடுத்து செல்வது தெரியவந்தது. 

மேலும் அவர்  திண்டிவனம் சந்தை மேடு பகுதியில் உள்ள ஐஸ் கம்பெனி பகுதியில் தங்கி, ஐஸ் வியாபாரம் செய்து வருவதும் விசாரணையில் வெளியானது.

 இதையடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக திருமுருகனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்