பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்தவர் சாவு

பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்தவர் உயிரிழந்தார்.

Update: 2022-05-15 23:18 GMT

திருச்சி:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அப்துல் லத்தீப்(வயது 55). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சென்னை பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் மதியம் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட மற்ற பயணிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அப்துல் லத்தீப் இறந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்