மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்; 19 மனுக்கள் பெறப்பட்டன

மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்; 19 மனுக்கள் பெறப்பட்டன

Update: 2022-05-16 12:37 GMT
திருச்சி, மே.17-
திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 19 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சாலை மேம்பாடு, பாதாள சாக்கடை இணைப்பு, சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு, தெருவிளக்கு அமைக்க கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டன. இந்த 19 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் ஆணையர் முஜிபுர்ரகுமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்