மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கு: மேலும் ஒருவர் கைது

மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது.

Update: 2022-05-16 17:50 GMT
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவிலைச் சேர்ந்தவர் 13 வயதுடைய பள்ளிக்கூட மாணவி. கடந்த மாதம் இரவு வீட்டில் இருந்த இவரை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். அப்போது மாணவியை காஞ்சிக்கோவிலை சேர்ந்த சலூன் கடை தொழிலாளியான கார்த்திக் (வயது 25) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த திருமணம் செய்து வைக்க உடந்தையாக இருந்த கார்த்திக்கின் உறவினரான காஞ்சிக்கோவிலை சேர்ந்த முரளி (35) என்பவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கொளப்பலூரில் இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று முரளியை கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் காவலில் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்