பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயற்சித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-16 19:11 GMT
திருச்சி, மே.17-
திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவரது மனைவி ரேவதி (வயது 32). வக்கீலானஇவர்.சம்பவத்தன்றுதனதுஅலுவலகத்திலிருந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தென்னூர் மந்தை பகுதியில் அவரை பின்தொடர்ந்து வந்த ஸ்ரீரங்கம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த கோபிநாத் (22) என்பவர் ரேவதியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்