மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்; டிரைவருக்கு வலைவீச்சு

சிவகிரி பகுதியில் மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-05-17 14:53 GMT
சிவகிரி:

சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார், விசுவநாதபேரியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்தனர். உடனே டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

அந்த டிராக்டரை போலீசார் சோதனை செய்தபோது, அதில் முறைகேடாக மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் டிரைவரான விசுவநாதபேரி புதிய காலனியைச் சேர்ந்த கணேசனை என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்