பிளஸ் 2 மாணவி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் மாணவர் கைது
கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 2 மாணவி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் மாணவர் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர், அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியிடம் திருமண ஆசை காட்டி அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்-மாணவியை தேடி கண்டு பிடித்தனர்.
விசாரணையில் மாணவர், மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மாணவரை போலீசார் கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் இ்ந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.