ஜம்மு காஷ்மீர்: தனித்தனி என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் நடந்த தனித்தனி என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Update: 2022-06-11 18:44 GMT

கோப்புப்படம்

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய இருவேறு என்கவுன்டர்களில் 2 பயங்கரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர்.

குல்காமில் உள்ள கந்திப்போரா கிராமத்தில் பயங்கரவாதி ஒருவர் இருப்பதாக கிடைந்த தகவலின் பேரில், அங்குள்ள பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான இடத்தில், மறைந்திருந்த பயங்கரவாதி கண்மூடித்தனமாக படைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அங்கிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டன.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீனின் சௌச் குல்காமில் வசிக்கும் ரசிக் அகமது கனி என அடையாளம் காணப்பட்டுள்ளான். அவனது உடல் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோல், புல்வாமா மாவட்டம் டிராப்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 

Tags:    

மேலும் செய்திகள்