பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் கணவனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்

பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் ராணுவ சீருடையில் கணவனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவியின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

Update: 2018-02-24 09:31 GMT
புதுடெல்லி

இந்திய விமானப்படையின் விங் கமாண்டராகப் பணியாற்றி வந்தவர் டி.வட்ஸ். ராணுவ மேஜரான இவர் மனைவி குமுத் மோர்கா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த சமயத்தில் கடந்த 15-ஆம்  தேதி உயிரிழந்தார்.

 இதையடுத்து சில நாட்களில் பெண் குழந்தையை பெற்றெடுத்த குமுத், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் ராணுவ சீருடையில் கணவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார். இத்தருணத்தில் புரண்டு அழும் பெண்களுக்கு மத்தியில், கனத்த இதயத்தோடு கணவர் இறுதி ஊர்வலத்தில் குழந்தையுடன் பங்கேற்ற குமுத்தின் செயல் காண்போரின் கண்களை குளமாக்கியது. 

மேலும் செய்திகள்