தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து சி.பி.ஐ. விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கதிரேசன் உள்பட பலர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

Update: 2018-08-22 23:45 GMT

புதுடெல்லி,

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, துப்பாக்கி சூடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று வக்கீல் எஸ்.முத்துக்குமார், கதிரேசன் ஆகியோர் தங்களது வக்கீல் ரீகன் எஸ்.பெல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்