இந்திய விமான படை துணை தளபதி தற்செயலாக சுட்டு கொண்டதில் தொடையில் காயம்
இந்திய விமான படையின் துணை தளபதி தியோ தற்செயலாக சுட்டு கொண்டதில் அவரது தொடையில் காயம் ஏற்பட்டது.
புதுடெல்லி,
இந்திய விமான படையின் துணை தளபதி எஸ்.பி. தியோ. இவர் கடந்த ஜூலையில் இந்த பதவியை ஏற்றார். இந்த நிலையில் இவர் தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதில் அவரது தொடையில் காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு உடனடியாக அவர் கொண்டு செல்லப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின் அவரது நிலை சீராக உள்ளது.
இந்திய விமான படையில் கடந்த 1979ம் ஆண்டு ஜூன் 15ந்தேதி போர் விமான விமானியாக பணியில் சேர்ந்த தியோ, தேசிய பாதுகாப்பு அகாடெமி மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உட்பட்ட தமிழகத்தின் வெல்லிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.