ஸ்ரீநகர் துப்பாக்கி சூட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி கொல்லப்பட்டார்

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி கொல்லப்பட்டு உள்ளார்.

Update: 2018-10-27 05:41 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புத்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரி கொல்லப்பட்டார் என போலீசார் தெரிவித்து உள்ளனர். புத்காம் மாவட்டத்தில் பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைந்துள்ளது. அதில்  மத்திய தொழில் பாதுகாப்பு படையின்  ஒரு ஏஎஸ்ஐக்கு தீவிர குண்டுகாயம் ஏற்பட்டது. 

காயமடைந்த ஏ.எஸ்.ஐ ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் மரணமடைந்தார் என  போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார் .

மேலும் செய்திகள்