11-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் 4 என்ஜினியரிங் மாணவர்கள் கைது

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 11-ம் வகுப்பு மாணவியை 4 என்ஜினியரிங் மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

Update: 2018-12-27 05:46 GMT
கான்பூர்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் காக்காடே பகுதியில் உள்ள ஒரு பிளாட்டில் வைத்து 11-ம் வகுப்பு மாணவியை என்ஜினியரிங் மாணவர்கள் 4 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதில்  ஒரு மாணவர் மாணவிக்கு நன்கு அறிமுகமானவர் ஆவார்.

பின்னர் 4 மாணவர்களும் மாணவியை பாபுபூர்வா காவல் நிலையம் அருகே  மயக்கமுற்ற நிலையில் விட்டு சென்று உள்ளனர். தனக்கு நேர்ந்த துயரம் குறித்து  மாணவி போலீஸ் நிலையத்தில் கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, ஆரம்ப விசாரணைக்கு  பின்னர் முறையாக கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சவ்வின் சுமார் கூறி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை  ஒரு போலீஸ் அதிகாரி ஆவார். 

இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அனுராக் யாதவ், அவரது நண்பர்கள் ஷாக்கி, சுபம், அபிஷேக் ஆகியோர் ஆவார்கள். இவர்கள் 4 பேரும்  வெவ்வேறு கல்லூரிகளில் பி.டெக். படித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்