மகாராஷ்டிராவில் துணி தொழிற்சாலையில் தீ விபத்து

மகாராஷ்டிராவில் பிவாண்டி பகுதியில் உள்ள துணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-12-31 04:32 GMT
மகாராஷ்டிராவில் பிவாண்டி பகுதியில் துணி தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.  இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டு உளளது.

இதில் கீழ்தளத்தில் கடுமையாக தீ பரவி அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.  இதுபற்றிய தகவல் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன.

அவர்கள் அருகிலுள்ள கட்டிடங்களுக்கு தீ பரவிடாமல் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர்.  இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை.

மேலும் செய்திகள்