பிரதமர் ஆவேன் என்று நான் நினைத்ததே இல்லை : அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த மோடி

பிரதமராக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை என்று அக்‌ஷய் குமாருடனான கலந்துரையாடலில் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-24 04:11 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் பேட்டி கண்டார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த பேட்டி காணும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பேட்டியின் போது பிரதமர் மோடி பல்வேறு சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

பிரதமர் மோடி பேட்டியின் போது கூறியதாவது:-  நான் சன்னியாசியாக வேண்டும் என்று தான் நினைத்தேன், பிரதமராக வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. எனக்கு கோபம் வராததை பார்த்து  மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கோபப்படும் அளவுக்கு நான் எந்த சூழலையும் உருவாக்கி கொள்ளவில்லை. எனக்கு கோபம் வரும் அதை நான் ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை.

எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு வரை எனக்கு வங்கி கணக்கு கிடையாது. ராணுவத்தில் சேர்ந்து  நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நினைத்தேன். வரலாறு போற்றும் தலைவர்களின் சுயசரிதைகளை படிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. எதிர்க்கட்சிகளில் பல நண்பர்கள் எனக்கு உள்ளனர்" இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்