முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என தகவல்

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-05-30 12:37 GMT

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என தகவல்  வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சரவையில் இடம்பெறுமாறு பிரதமர் மோடி அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும், பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவுடனான பிரச்சனையை தீர்ப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றியவர். வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய போது சிறப்பாக செயல்பட்டவர், பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெற்றவர்களில் ஜெய்சங்கரும் ஒருவராவார். 

மேலும் செய்திகள்