இந்திரா காந்தி நினைவு தினம்- சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதை
இந்திரா காந்தி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.