காஷ்மீரில் அரசு வேலைவாய்ப்புக்காக போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த 7 பேர் கைது

காஷ்மீரில் அரசு வேலைவாய்ப்புக்காக போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-03-01 20:23 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் அரசின் விளையாட்டு துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் பட்காம், புல்வாமா மாவட்டங்களை சேர்ந்த 7 பேர் போலி விளையாட்டு சான்றிதழ்களை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விளையாட்டு அமைப்புகளில் இருந்து தேசிய அளவில் பெறப்பட்டது போல அவை தயாரிக்கப்பட்டு இருந்தன.

இவ்வாறு போலி சான்றிதழ்கள் கொடுத்த 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் உள்பட 14 பேரின் நியமனங்களை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இயக்குனரகம் ரத்து செய்து உள்ளது.

மேலும் செய்திகள்