காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு ராகுல் காந்தி பாராட்டு - “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு”

கொரோனாவுக்கு எதிரான போரை வலிமையாக நடத்தி வருவதாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-17 23:41 GMT
புதுடெல்லி, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்‘ பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராஜஸ்தான், சத்தீஸ்கார், பஞ்சாப், புதுச்சேரி போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், கொரோனாவுக்கு எதிரான போரை வலிமையாக நடத்தி வருகின்றன.

குறிப்பாக, சத்தீஸ்கார் மாநிலத்தில், 200 படுக்கை வசதி கொண்ட புதிய ஆஸ்பத்திரி 20 நாட்களில் கட்டப்பட்டுள்ளது. எனவே, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்