தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கப் போவது இல்லை- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவது இல்லை என்று உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Update: 2020-04-20 12:10 GMT
லக்னோ,

உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த்(வயது 71) உடல் நலக்கோளாறு காரணமாக  அவதிப்பட்டு வந்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த் சிங் பிஷ்த், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, கடந்த  15-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.  எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். 

அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் எனத் தெரிகிறது. அவரது சொந்த ஊரி்ல இறுதி சடங்குகள் செய்யப்படவுள்ளது.
 ஆனால், தனது தந்தை ஆனந்த் சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என முதல்வர்  யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.  

கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அதில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மாட்டேன் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்