பீகாரில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த பாதிப்பு 707 ஆக உயர்வு

பீகாரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-11 09:21 GMT
பாட்னா, 

பீகாரில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்,  பீகாரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது.

 புதிதாக இன்று கொரோனா தொற்றுக்கு ஆளான அனைவரும் 17 முதல் 52 வயதுக்கு உட்பட்பட்ட ஆண்கள் என்று பீகார் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   பீகாரில் கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் இதுவரை 36,053 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  

மேலும் செய்திகள்