இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்
இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
புதுடெல்லி,
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல்கட்டமாக கடந்த 7-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட பணி, கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில், ஜூன் 4-ந் தேதி முதல் 6-ந் தேதிவரை, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவீடன், ஜெர்மனி, தென்கொரியா ஆகிய 6 நாடுகளுக்கு கூடுதலாக மீட்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.