திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும்: பிரதமர் மோடி தமிழில் டுவிட்

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-16 10:54 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி திருக்குறளை புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:-

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள  இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும்.  உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும்  கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்