ஐந்தாம் கட்ட ஊரடங்கு: தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும்..?

ஐந்தாம் கட்ட ஊரடங்கு: தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Update: 2020-09-28 02:08 GMT
புதுடெல்லி  

 அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதற்கான, ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நாடக இசை- நடன அரங்குகள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் தொழில், வர்த்தகம், சுற்றுலா, கலாசாரம் தொடர்பான பல்வேறு தளர்வுகளுக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.  

மேலும் செய்திகள்