ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலியானார்கள். 3 பேர்படுகாயம் அடைந்துள்ளனர்.

Update: 2020-10-05 09:13 GMT

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் பாம்பூர் பைபாஸில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் கொல்லப்பட்டனர். மூன்று சிஆர்பிஎஃப் பணியாளர்களும் காயமடைந்ததாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீநகர் நகரின் புறநகரில் உள்ள டங்கன் பைபாஸ் அருகே சி.ஆர்.பி.எஃப்  வீரர்கள் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதாகவும், சம்பவ இடம் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்