அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா

அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-19 18:08 GMT
கவுகாத்தி, 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் கொரோனா தொற்று பாதிப்பு காணப்படுகிறது.  அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 698- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. 

 தொற்று பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 73 ஆயிரத்து 210- பேர் குணம் அடைந்த நிலையில், 875- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  அசாமில் தொற்று பாதிப்புடன் 27,319- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல்களை அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்