கேரளத்தில் புதிதாக 6,169 பேருக்கு கொரோனா

கேரளத்தில் புதிதாக 6,169- கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-23 15:45 GMT
திருவனந்தபுரம், 

கேரளத்தில் புதிதாக 6,169 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - “ கேரளாவில் இன்று புதிதாக 6,169 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக  22 -பேர்  பலியாகியுள்ளனர்.   மொத்த பலி எண்ணிக்கை 2,892 ஆக உயர்ந்துள்ளது. 4,808 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்